அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
31-10-2024

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பரவசம் குடிகொள்ளும்
பலகார படையலோடு
பலவகை ஆகாரமும்

உறவுகள் ஒன்று கூடி
உண்பதே எம்நாட்டில்
வெளிநாட்டு வாழ்க்கை
வேலைப் பளுவாகி

அருகாமை வீடெல்லாம்
அயல்நாட்டு உறவுமாகி
பண்டிகையும் தொலைத்து
பரதேசி ஆயாச்சு!

பண்டிகை தூய்மை
பலரின் மனங்களிலும்
படையல்கள் ஏழைவீட்டு
அடுப்பிலும் எரியட்டும்!

பஞ்சம் நீங்கி வாழ்வுமேம்பட
பல நெஞ்சம் ஏங்கி நிற்குதே
இப்பண்டிகை வந்தாலே
இன்பம் பொங்குமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading