பண்டிகை வந்தாலே

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-40
31-10-2024

பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
பரவசம் குடிகொள்ளும்
பலகார படையலோடு
பலவகை ஆகாரமும்

உறவுகள் ஒன்று கூடி
உண்பதே எம்நாட்டில்
வெளிநாட்டு வாழ்க்கை
வேலைப் பளுவாகி

அருகாமை வீடெல்லாம்
அயல்நாட்டு உறவுமாகி
பண்டிகையும் தொலைத்து
பரதேசி ஆயாச்சு!

பண்டிகை தூய்மை
பலரின் மனங்களிலும்
படையல்கள் ஏழைவீட்டு
அடுப்பிலும் எரியட்டும்!

பஞ்சம் நீங்கி வாழ்வுமேம்பட
பல நெஞ்சம் ஏங்கி நிற்குதே
இப்பண்டிகை வந்தாலே
இன்பம் பொங்குமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading