அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பாசத்தின் பகிர்வினிலே (712)

செல்வி நித்தியானந்தன்
பாசத்தின் பகிர்வினிலே

காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்ணிலே வலிகளை
சுமந்து
கடமைதனை திறம்பட
செய்து
நேர்த்தியும் பலதினை
செய்து
நெஞ்சிலே கனமும்
தாங்கியவர்

பணிகள் பலதும்
செய்து
பசியும் பலமுறை
மறந்து
உணவின் ருசிதனை
துறந்து
மகவுகள் உயர்வு
கண்டு
அகம் மகிழ்வில்
அலையாகி
கரைதனை அடைய
உரமானர்

பாசத்தை சமனாய்
பங்கிட்டு
பங்குவமாய் பலதை
கற்பித்து
பலருக்கும் உதவி
புரிந்திட்டு
புவியிலே பூரிப்பாய்
வாழ்ந்த
அன்னைக்கு பகிரவே
நிகருண்டோ

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading