ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாசப்பகிர்வினிலே

ராணி சம்பந்தர்

தரணியில் தாயின் நேசந்தனை
வாயினால் சொல்லத் தமிழிலே
எந்த வார்த்தையும் வரவில்லையே

பத்து மாதம் கரு சுமந்த போதும்
வலி வேதனை சூழ்ந்த போதுமே
துன்பமின்றி இன்பமோடு ஏற்ற
உலகம் போற்றும் உத்தமித்தாயே

தன் உதிரத்தைப் பாலாக்கியே
ஊட்டி வளர்த்து உரம் தந்தவரே
உம் பொறுமையே பூமியிலந்த
அவதாரம் பாசப்பகிர்வினிலே

சேலைத் தலைப்போடு ஒட்டிய
ஒட்டுண்ணியாம் எம் விதியின்
சதியாலே தொட்டு வணங்கும்
தெய்வமதைத் தனியே தவிக்க
விட்ட பாவிகள் இறுதிக்கடனே
செய்யாமல் நன்றி கெட்டவர்
ஆனோமே .

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading