ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாசப்பகிர்வினிலே..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2145!!
பாசப்பகிர்வினிலே..!!

பக்குவமாய் இரு ஐந்து திங்கள்
பகல் இரவாய்க் கண்விழித்து
பாலூட்டித் தாலாட்டி வளர்த்து
ஆளும் அன்னை வடிவே வாழ்க..

ஒன்றல்ல இரண்டல்ல சுமந்து
ஒன்றன் பின் ஒன்றாய் கருத்தரித்து
நோய் என்றும் நோ என்றும் பொறுத்து
வாயை வயிற்றை கட்டி வளர்ப்பாள்…

உண்டி தனைத் தான் விலக்கி
மெண்டு நீரைத்தான் குடித்து
மிச்சம் உள்ள பிள்ளையை வளர்க்கும்
தாய்மைக்கு புகழே தருவோம்..

பாசத்தினைப் பகிர்வதிலே
பேதமை இங்கே காட்டுவதில்லை
மூலையிலே முடங்கினாலும்
முன் வந்து போராட்டம் செய்யாளே..

அன்னை எனும் அற்புதத்தை
அழகு நிறை பெட்டகத்தை
காத்து நிற்கும் பணி நமதே
காலம் எல்லாம் போற்றுவமே..
சிவதர்சனி இராகவன்
8/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading