பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

பாலதேவகஜன்

நிர்மூலம்

கருவாய் காத்த
காலாச்சாரம் இங்கே
கருகியே போகும்
கதிதான் எங்கும்.

காத்து நின்றவர்
கரங்களும் ஓய்ந்திட
காத்து இருந்தவன்
காட்டுறான் தன் வேலையை.

பருவங்கள் தாட்டியே
பாதைகள் நீளுதே
பாதகம் எங்குமே
படர்துதான் போகுதே.

ஆவாவும் மாவாவும்
ஆங்காங்கே முளைக்குதே
கஞ்சாவும் ஐஸ்சும்
கடல்கடந்து வருகுதே.

வெளிநாட்டு பணங்களால்
பிணவாடை வீசுதே
வெறித்தனங்கள் வீதிகளில்
விசித்திரம் காட்டுதே.

அடக்கமும் அமைதியும்
அழிந்துதான் போகுதே
அரைகுறை ஆடையும்
அகன்றதாய் தேணுதே.

எதிலும் நிமிர்வோடு
என்றே தானிருந்தோம்
அத்தனையும் நிர்மூலம்
ஆனதுவே நம் சோகம்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading