28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
பாலதேவகஜன்
நிர்மூலம்
கருவாய் காத்த
காலாச்சாரம் இங்கே
கருகியே போகும்
கதிதான் எங்கும்.
காத்து நின்றவர்
கரங்களும் ஓய்ந்திட
காத்து இருந்தவன்
காட்டுறான் தன் வேலையை.
பருவங்கள் தாட்டியே
பாதைகள் நீளுதே
பாதகம் எங்குமே
படர்துதான் போகுதே.
ஆவாவும் மாவாவும்
ஆங்காங்கே முளைக்குதே
கஞ்சாவும் ஐஸ்சும்
கடல்கடந்து வருகுதே.
வெளிநாட்டு பணங்களால்
பிணவாடை வீசுதே
வெறித்தனங்கள் வீதிகளில்
விசித்திரம் காட்டுதே.
அடக்கமும் அமைதியும்
அழிந்துதான் போகுதே
அரைகுறை ஆடையும்
அகன்றதாய் தேணுதே.
எதிலும் நிமிர்வோடு
என்றே தானிருந்தோம்
அத்தனையும் நிர்மூலம்
ஆனதுவே நம் சோகம்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...