பூத்ததே புதுவனம்…

வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்…
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய் பயணிக்கும் பாதை
ஈர்த்தெழுதும் பல்முனைப்பில் பரிணமிக்கும் வேளை
திறமைகளும் பெருமைகளும் தேர்வாகி ஒளிரும்
இடைக்கிடையே இடர்துன்பம் இணைந்தே தான் மிளிரும்
வருமானச் செறிவிலே வண்ணங்கள் உராயும்
செலவாகும் செல்வாக்கில் சேமிப்பும் கரையும்
உற்பத்தி உயர்துறைகள் அபிவிருத்தி ஆற்றல்
கற்பித்தல் கலைத்துறைகள் கண்கவரும் படைப்பில்
எத்துறையும் ஏற்றமுறும் தொழில்நுட்ப ஆட்சி
பற்றுடனே பற்றி நிற்கும் பண்பாட்டு காட்சி
விட்டகலா வெற்றி நிலம் தொட்டுயரும் வேட்கை
அத்தனையும் அடுக்கடுக்காய் மலர்ந்து மணம் கமழும்
வெற்றிவாகை சூடிநிதம் தோகைவிரித்தாடும்
புதுவனமே புத்தாண்டாய்பூத்திட்டமகிழ்வு!நன்றி

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading