அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

பூமழை தூவும்

பூமழை தூவும்

பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும்
பாமழை தூவிப் பரிவும் மேவிடவே
ஞானமழை பொழியும் ஞாலமும் வேண்டுமடி
தாவிரும் மேகமே தூதாகப் போய்வருவாய்

நீரூற்றுப் பிறந்திடவே நீங்கிடும் துன்பமெல்லாம்

வாவிகுளம் நிறைந்து விட்டால் பசுமையுமே
புரட்சியும் தேவையில்லை அயர்ச்சியும் எங்குமில்லை
எழுச்சியாய் வாழ்ந்திடவும் ஏற்றத்தைப் பெற்றிடவும்

காணமயில் ஆட்டத்தைக் கண்டவர்கள் மகிழ்ந்திடுவார்

தேனிசைக் குரலால் கீதமும் பாடிடுவார்
வான்மழை பொழிந்திடவே வையகம் கனிந்திடவே
வைரமணி விளைந்திடவே வசந்தம் வீசிவரும்

களைப்பாறி இருந்திடவே காக்கும் தெய்வமடி
முளையாக வருவதுதான் மரமாக நிற்குமடி
சளையாத புத்தியாலே களமாடி வருவாயே
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading