பூமழை தூவும்

பூமழை தூவும்

பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும்
பாமழை தூவிப் பரிவும் மேவிடவே
ஞானமழை பொழியும் ஞாலமும் வேண்டுமடி
தாவிரும் மேகமே தூதாகப் போய்வருவாய்

நீரூற்றுப் பிறந்திடவே நீங்கிடும் துன்பமெல்லாம்

வாவிகுளம் நிறைந்து விட்டால் பசுமையுமே
புரட்சியும் தேவையில்லை அயர்ச்சியும் எங்குமில்லை
எழுச்சியாய் வாழ்ந்திடவும் ஏற்றத்தைப் பெற்றிடவும்

காணமயில் ஆட்டத்தைக் கண்டவர்கள் மகிழ்ந்திடுவார்

தேனிசைக் குரலால் கீதமும் பாடிடுவார்
வான்மழை பொழிந்திடவே வையகம் கனிந்திடவே
வைரமணி விளைந்திடவே வசந்தம் வீசிவரும்

களைப்பாறி இருந்திடவே காக்கும் தெய்வமடி
முளையாக வருவதுதான் மரமாக நிற்குமடி
சளையாத புத்தியாலே களமாடி வருவாயே
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading