“பூமி “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208

“பூமி”
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!

அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை உள்ளத்தில்
எம்மை சுமக்கின்றது பூமி
அது என் சாமி!

சூரிய ஒளியில்
பயிர் விளைகின்ற பூமி
ஓசோனின் படலம் உடைந்து
வெப்ப காற்று வீசுகின்றது!

நுட்பமான பூமி
வெப்பத்தால்
வெடிக்க விடாதே
இயற்கை ஒளி விழும் பூமி
செயற்கை ஒளியூட்டி அழிக்காதே!

நன்றி
வணக்கம் 🙏

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading