பூமி…

வசந்தா ஜெகதீசன்
பூமி….
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி நடை பயிலவும் தனித்துவமாய் வாழவும்
தளமாய் மிளிரும் பூமியே
இயற்கை கொடையின் இருப்பிடம்
இல்லற வாழ்வின் தரிப்பிடம்
உயிரினத்தின் உறைவிடம்
பயிரினத்தின் பாரிது
இரவு பகலாய் சுற்றுமே
இயல்பாய் கிட்டிய கொடையிது
அரணாய் காப்போம் அதன்நிலை அடுத்த தலைமுறை தொடராக….
நன்றி

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading