மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 277
10/09/2024 செவ்வாய்
“வலி”
——
வலிகள் நிறை இவ்வுலகு!
வராமல் பார்த்து நீ ஒழுகு!
வருவது உணரின் நீ விலகு!
வந்திடின் ஏற்று நீ பழகு!

சிரசில் இருந்து பாதம் வரை,
சிரமம் தந்திடும் இப்பூமி தரை!
அரசன் முதல் ஆண்டி வரை,
அதற்கு உண்டோ ஏதும்வரை!

வாழ்வே வலியின் வாகனமாம்!
வாழும் முறையே சாதனமாம்!
மீள்வே தந்தால் ஆதனமாம்!
மீண்டு வந்தால் வேதனமாம்!

கல்லு எங்கே பட்டிடினும்,
காலைத் தூக்கிடும் நாயினம்!
முள்ளு எங்கே தைத்திடினும்!
முடிவில் வலிக்குமே எம்மிதயம்!

கல்லால் பட்ட கடும்வலியும்,
காயம் காய்ந்திட மாய்ந்து விடும்!
சொல்லால் பட்ட சிறுவலியோ,
சொர்க்கம் வரை சேர்ந்துவரும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading