” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 277
10/09/2024 செவ்வாய்
“வலி”
——
வலிகள் நிறை இவ்வுலகு!
வராமல் பார்த்து நீ ஒழுகு!
வருவது உணரின் நீ விலகு!
வந்திடின் ஏற்று நீ பழகு!

சிரசில் இருந்து பாதம் வரை,
சிரமம் தந்திடும் இப்பூமி தரை!
அரசன் முதல் ஆண்டி வரை,
அதற்கு உண்டோ ஏதும்வரை!

வாழ்வே வலியின் வாகனமாம்!
வாழும் முறையே சாதனமாம்!
மீள்வே தந்தால் ஆதனமாம்!
மீண்டு வந்தால் வேதனமாம்!

கல்லு எங்கே பட்டிடினும்,
காலைத் தூக்கிடும் நாயினம்!
முள்ளு எங்கே தைத்திடினும்!
முடிவில் வலிக்குமே எம்மிதயம்!

கல்லால் பட்ட கடும்வலியும்,
காயம் காய்ந்திட மாய்ந்து விடும்!
சொல்லால் பட்ட சிறுவலியோ,
சொர்க்கம் வரை சேர்ந்துவரும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan