29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 170
12/04/2022 செவ்வாய்
“அல்லாடும் எம் அரும் நாடு”
———————————
அழகு மிகுந்த நம் நாடு
அன்பால் இணைந்த ஒர் கூடு
பழகு தமிழும் சிங்களமும்
பாங்குடன் உலவிய நல் வீடு!
அரசியல் புகுந்து விளையாடி
ஆணவம் மிகவும் தலைக்கேறி
உரசல் களையே உண்டாக்கி
உள்ளங்களை மாற்றி கல்லாகி!
உணர்வுகள் எல்லை மீறியதால்
உயிர்கள் போயின ஆயிரமாய்
கனவுகள் யாவும் கருகியதால்
கழிந்தது காலம் கண்ணீரில்!
“தாமே” என்ற நினைப்பதனால்
தப்புக் கணக்கும்போட்டதனால்
நாடே இன்று நடுத் தெருவில்
நாயாய் அலையுது நம்முன்னால்!
விளக்கு ஏற்றவும் நெய்யில்லை
விடிந்தால் சமைக்க வாயு இல்லை
தலைக்கு மேலே கடன் தொல்லை
தாண்டி விட்டதே தன் எல்லை!
வயிற்றில் இன்று விழுகுதடி
வாயும் அதனால் திறக்கிறதடி
கயிற்றில் நடக்கும் காலமடி
காலம் கனிந்தால் நல்லதடி!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...