12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 170
12/04/2022 செவ்வாய்
“அல்லாடும் எம் அரும் நாடு”
———————————
அழகு மிகுந்த நம் நாடு
அன்பால் இணைந்த ஒர் கூடு
பழகு தமிழும் சிங்களமும்
பாங்குடன் உலவிய நல் வீடு!
அரசியல் புகுந்து விளையாடி
ஆணவம் மிகவும் தலைக்கேறி
உரசல் களையே உண்டாக்கி
உள்ளங்களை மாற்றி கல்லாகி!
உணர்வுகள் எல்லை மீறியதால்
உயிர்கள் போயின ஆயிரமாய்
கனவுகள் யாவும் கருகியதால்
கழிந்தது காலம் கண்ணீரில்!
“தாமே” என்ற நினைப்பதனால்
தப்புக் கணக்கும்போட்டதனால்
நாடே இன்று நடுத் தெருவில்
நாயாய் அலையுது நம்முன்னால்!
விளக்கு ஏற்றவும் நெய்யில்லை
விடிந்தால் சமைக்க வாயு இல்லை
தலைக்கு மேலே கடன் தொல்லை
தாண்டி விட்டதே தன் எல்லை!
வயிற்றில் இன்று விழுகுதடி
வாயும் அதனால் திறக்கிறதடி
கயிற்றில் நடக்கும் காலமடி
காலம் கனிந்தால் நல்லதடி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...