மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 177
07/06/2022 செவ்வாய்
பழமை
———-
நேற்றைய தினத்துப் புதியது
நெஞ்சு கொஞ்சம் மறந்துபோய்
நினைவி லிருந்து விலகி விடின்
நாளைய தினம் அது பழையதா?

கொடியில் நேற்று உருவாகி
கொல்லையில் இன்று பூவாகி
கடிதினில் அரும் காயாகி
கனியாகின் அது பழையதா?

ஏணிக்கு ஒரு கால் போனால்
எடுத்து வீசுவது வழமைதான்!
தூணின் மேற்பகுதி தூர்ந்தாலும்
தூரா திருப்பது அடித்தளமே!

குளிர் காலம் ஒன்று வந்ததுமே
களை யிழந்து போன தெல்லாமே
துளிர் விட்டு மீள உயிர்ப்பதற்கு
தூணாய் இருப்பது பழம் வேரே!

புதிய தென்று நாம் கருதுபவை
புதிதாய் இன்று முளைத் தவையா?
பழைய ஊறலில் இருந்துதானே
பக்குவம் மேலும் பிறக்கிறது!

வயது முதிர்ந்ததால், உடல்
வலிமை சற்று இறங் கியதால்
கயவர்போல நினைத்து அவரை
காலில் போட்டு கசக்கலாமா?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading