மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 177
07/06/2022 செவ்வாய்
பழமை
———-
நேற்றைய தினத்துப் புதியது
நெஞ்சு கொஞ்சம் மறந்துபோய்
நினைவி லிருந்து விலகி விடின்
நாளைய தினம் அது பழையதா?

கொடியில் நேற்று உருவாகி
கொல்லையில் இன்று பூவாகி
கடிதினில் அரும் காயாகி
கனியாகின் அது பழையதா?

ஏணிக்கு ஒரு கால் போனால்
எடுத்து வீசுவது வழமைதான்!
தூணின் மேற்பகுதி தூர்ந்தாலும்
தூரா திருப்பது அடித்தளமே!

குளிர் காலம் ஒன்று வந்ததுமே
களை யிழந்து போன தெல்லாமே
துளிர் விட்டு மீள உயிர்ப்பதற்கு
தூணாய் இருப்பது பழம் வேரே!

புதிய தென்று நாம் கருதுபவை
புதிதாய் இன்று முளைத் தவையா?
பழைய ஊறலில் இருந்துதானே
பக்குவம் மேலும் பிறக்கிறது!

வயது முதிர்ந்ததால், உடல்
வலிமை சற்று இறங் கியதால்
கயவர்போல நினைத்து அவரை
காலில் போட்டு கசக்கலாமா?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading