” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 177
07/06/2022 செவ்வாய்
பழமை
———-
நேற்றைய தினத்துப் புதியது
நெஞ்சு கொஞ்சம் மறந்துபோய்
நினைவி லிருந்து விலகி விடின்
நாளைய தினம் அது பழையதா?

கொடியில் நேற்று உருவாகி
கொல்லையில் இன்று பூவாகி
கடிதினில் அரும் காயாகி
கனியாகின் அது பழையதா?

ஏணிக்கு ஒரு கால் போனால்
எடுத்து வீசுவது வழமைதான்!
தூணின் மேற்பகுதி தூர்ந்தாலும்
தூரா திருப்பது அடித்தளமே!

குளிர் காலம் ஒன்று வந்ததுமே
களை யிழந்து போன தெல்லாமே
துளிர் விட்டு மீள உயிர்ப்பதற்கு
தூணாய் இருப்பது பழம் வேரே!

புதிய தென்று நாம் கருதுபவை
புதிதாய் இன்று முளைத் தவையா?
பழைய ஊறலில் இருந்துதானே
பக்குவம் மேலும் பிறக்கிறது!

வயது முதிர்ந்ததால், உடல்
வலிமை சற்று இறங் கியதால்
கயவர்போல நினைத்து அவரை
காலில் போட்டு கசக்கலாமா?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan