மனோகரி ஜெகதீசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விருப்பத் தலைப்பு

வராததுமேனோ இங்கே

நாக்குச் செத்து
நாலும் விட்டு
தேக்கு உடலும்
தேயக் கெட்டு
பட்டுக் கிடக்கின்றோம்
பாதகம் பட்டு

தட்டேந்தும் எம்கரங்களைத் தள்ளி
இறக்கி
யாசகக் கூனலை
வேரோடு தறிக்க
யாரும் வராததுமேனோ இங்கு -எம்
வாசகமும் கேட்காது
போனதுமேனோ உங்கு
முட்டி மோதியுதவி கொட்ட முன்னிலை காட்டாததுமேனோ

பட்ட கடனைத் தருவோம் பின்னே
பழுதுகள் மறைந்து
பாதைகள் சீரான உடனே
விட்டுவிடாதீர் அதுவரை
வீணார் கைகளில் சாக எமை

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading