மனோகரி ஜெகதீசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விருப்பத் தலைப்பு

வராததுமேனோ இங்கே

நாக்குச் செத்து
நாலும் விட்டு
தேக்கு உடலும்
தேயக் கெட்டு
பட்டுக் கிடக்கின்றோம்
பாதகம் பட்டு

தட்டேந்தும் எம்கரங்களைத் தள்ளி
இறக்கி
யாசகக் கூனலை
வேரோடு தறிக்க
யாரும் வராததுமேனோ இங்கு -எம்
வாசகமும் கேட்காது
போனதுமேனோ உங்கு
முட்டி மோதியுதவி கொட்ட முன்னிலை காட்டாததுமேனோ

பட்ட கடனைத் தருவோம் பின்னே
பழுதுகள் மறைந்து
பாதைகள் சீரான உடனே
விட்டுவிடாதீர் அதுவரை
வீணார் கைகளில் சாக எமை

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading