மனோகரி ஜெகதீஸ்வரன்

வசந்தம்

பருவத்துள் இவள்பெயரே வசந்தம்
பாருக்கு இவளே பெருஞ்சொந்தம்

காரகல வந்தே சேர்வாள்
கருணையைப் பூட்டியே ஓய்வாள்
தென்றலைக் கூட்டியே வருவாள்
தேகத்தை மீட்டியே செல்வாள்

வசந்தமிவள் சிந்துவாள் சுகந்தம்
வசமிழக்கவும் சூட்டுவாள் பலவண்ணம்

பூத்துப் பூக்களும் புதுவகை மெத்தையிடும்
ஈக்களும் மொய்த்துண்டு
சேர்க்கைக்கு உதவும்

தளிர்களும் பெருகி
மரங்களை மறைக்கும் தன்னியல்பால் வாவென அவையும் கையசைக்கும்
தாவியோடும் அணிலும்
குருவிகிளியும்
கனிசுவைக்கும்
தாமுண்ட பின்னே விதைவீசி விதைக்கும்

குயிலும் கூவும் குரலெடுத்து
குரங்கும் தாவும் மகிழ்வுடுத்து
பயிலும் பசுமை அரங்கெடுத்து

காகம் கட்டும் கூடு
சுள்ளி பொறுக்கித் எடுத்து
நாவும் கொட்டும் பாவை
நற்றமிழை நாணிடாது தொடுத்து

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading