மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

வசந்தம்

பருவத்துள் இவள்பெயரே வசந்தம்
பாருக்கு இவளே பெருஞ்சொந்தம்

காரகல வந்தே சேர்வாள்
கருணையைப் பூட்டியே ஓய்வாள்
தென்றலைக் கூட்டியே வருவாள்
தேகத்தை மீட்டியே செல்வாள்

வசந்தமிவள் சிந்துவாள் சுகந்தம்
வசமிழக்கவும் சூட்டுவாள் பலவண்ணம்

பூத்துப் பூக்களும் புதுவகை மெத்தையிடும்
ஈக்களும் மொய்த்துண்டு
சேர்க்கைக்கு உதவும்

தளிர்களும் பெருகி
மரங்களை மறைக்கும் தன்னியல்பால் வாவென அவையும் கையசைக்கும்
தாவியோடும் அணிலும்
குருவிகிளியும்
கனிசுவைக்கும்
தாமுண்ட பின்னே விதைவீசி விதைக்கும்

குயிலும் கூவும் குரலெடுத்து
குரங்கும் தாவும் மகிழ்வுடுத்து
பயிலும் பசுமை அரங்கெடுத்து

காகம் கட்டும் கூடு
சுள்ளி பொறுக்கித் எடுத்து
நாவும் கொட்டும் பாவை
நற்றமிழை நாணிடாது தொடுத்து

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading