18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
வசந்தம்
பருவத்துள் இவள்பெயரே வசந்தம்
பாருக்கு இவளே பெருஞ்சொந்தம்
காரகல வந்தே சேர்வாள்
கருணையைப் பூட்டியே ஓய்வாள்
தென்றலைக் கூட்டியே வருவாள்
தேகத்தை மீட்டியே செல்வாள்
வசந்தமிவள் சிந்துவாள் சுகந்தம்
வசமிழக்கவும் சூட்டுவாள் பலவண்ணம்
பூத்துப் பூக்களும் புதுவகை மெத்தையிடும்
ஈக்களும் மொய்த்துண்டு
சேர்க்கைக்கு உதவும்
தளிர்களும் பெருகி
மரங்களை மறைக்கும் தன்னியல்பால் வாவென அவையும் கையசைக்கும்
தாவியோடும் அணிலும்
குருவிகிளியும்
கனிசுவைக்கும்
தாமுண்ட பின்னே விதைவீசி விதைக்கும்
குயிலும் கூவும் குரலெடுத்து
குரங்கும் தாவும் மகிழ்வுடுத்து
பயிலும் பசுமை அரங்கெடுத்து
காகம் கட்டும் கூடு
சுள்ளி பொறுக்கித் எடுத்து
நாவும் கொட்டும் பாவை
நற்றமிழை நாணிடாது தொடுத்து
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...