மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாற்றம்

மாறுபடும் நிலையே மாற்றம்
ஊறுதரும் சிலமாற்றம்
உய்வுதரும் பலமாற்றம்

சாதக மாற்றம் தரும் ஏற்றம்
பாதக மாற்றம் தரும்
ஏமாற்றம்

முன்னைய மாற்றத்தாலே
அதுதந்த ஏமாற்றத்தாலே
இன்னமும்
நடக்கின்றோம்
உபத்திரவச் சாலையில்
ஊனவுணர்வுகளோடு
உடற்கூடு காவி

எச்சங்களைப் பேணும்
எங்களது ஆசை
உச்சத்தில் இருப்பதாலேயே
ஊமைகளாய் கடக்கின்றோம்
அச்சத்தை மறைக்கவே
ஒப்புக்காய் சிரிக்கின்றோம்
கொச்சைப் பேச்சுக்களைக்
கொசுவத்தில் கொழுவாது
இச்சை யடக்கி
இதயத்தை இறுக்கின்றோம்
பிச்சைகளை ஏற்றும்
பிஞ்சுகளைக் காக்கின்றோம்

கூச்சலிட்டு என்ன பயன்?
கும்மிருட்டு அகலவா போகிறது
ஆச்சரியம் நிகழின்
அனைத்தும் மாறும்
பாதகம் கழுவேறும்
சாதகம் அரங்கேறும்

முப்பொழுதும் வேண்டித் துதிக்கின்றேன்
எப்போது வருமது சொல்லுங்கள்
அப்போதே பூச்சொரியும் என்பாக்கள்
தப்பேதும் சொல்லாதீர்கள்
அதுவரை மௌனமே எனதுமொழி

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading