மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மாதவமே உந்தனை

நேவஸ் பிலிப் கவி இல(361 28/11/24

ஈழத் தாயவள் பெற்றெடுத்த
தவப் புதல்வர்கள்
மண்மீட்புப் பணியில்
களமிறங்கி போராடிய
மறவர்கள்

வன்முறைக் கூட்டம
வளம் கொழிக்கும்
தாய் மண்ணை
சிதைத்தொழிக்க

இன வாதக் கொடுமை
நாட்டினில் பெருகிடவே
நேருக்கு நேராய் நின்றீர்
போருக்கஞ்சா வீர்ராய்

நீதியும் தர்மமும் நிலை தாழ்ந்து
வீழ்தல்கண்டு
நீரும் நெருப்பும் துச்சமென
கடலோடு போராடி ,சோராத மனதோடு
வேரோடு வீழ்கின்றவிதி வந்த போதினிலும்
எரிகின்ற தணலூடே களமாடினீர்

ஊரும் பெயரும் அறியவில்லை -நீங்கள்
சீரோடு போராடிய திறமறிந்தோம்
உங்கள் தியாகத்தின் சிறப்பறிந்தோம்

மாண்டும் மடியாது எம்மை
ஆட்கொண்ட “மாதவமே உந்தனை”
எம் சிந்தையில் கொண்டு
தீபங்களேற்றி
வந்தனை செய்கின்றோம்
என்றும் புகழ் கொண்டீர்
எம் தலை சாய்ந்த வீர வணக்கமேற்பீர்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading