மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மாதவமே உந்தனை

நேவஸ் பிலிப் கவி இல(361 28/11/24

ஈழத் தாயவள் பெற்றெடுத்த
தவப் புதல்வர்கள்
மண்மீட்புப் பணியில்
களமிறங்கி போராடிய
மறவர்கள்

வன்முறைக் கூட்டம
வளம் கொழிக்கும்
தாய் மண்ணை
சிதைத்தொழிக்க

இன வாதக் கொடுமை
நாட்டினில் பெருகிடவே
நேருக்கு நேராய் நின்றீர்
போருக்கஞ்சா வீர்ராய்

நீதியும் தர்மமும் நிலை தாழ்ந்து
வீழ்தல்கண்டு
நீரும் நெருப்பும் துச்சமென
கடலோடு போராடி ,சோராத மனதோடு
வேரோடு வீழ்கின்றவிதி வந்த போதினிலும்
எரிகின்ற தணலூடே களமாடினீர்

ஊரும் பெயரும் அறியவில்லை -நீங்கள்
சீரோடு போராடிய திறமறிந்தோம்
உங்கள் தியாகத்தின் சிறப்பறிந்தோம்

மாண்டும் மடியாது எம்மை
ஆட்கொண்ட “மாதவமே உந்தனை”
எம் சிந்தையில் கொண்டு
தீபங்களேற்றி
வந்தனை செய்கின்றோம்
என்றும் புகழ் கொண்டீர்
எம் தலை சாய்ந்த வீர வணக்கமேற்பீர்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading