மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

மாதவமே உந்தனை…..

ரஜனி அன்ரன்

மாதவமே உந்தனை…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 28.11.2024

மாதவ மறவரே மண்ணின் மைந்தரே
மறப்போமா உமை நாம்
தாயகமே தாரக மந்திரமாய்
தார்மீகமே இலட்சியமாய்
தியாகமே உன்னத குறிக்கோளாய்
விடியல் கனவோடு வித்தாகிய
புனிதமான உம் தியாகங்கள்
தற்கொடையான ஈகங்கள்
தமிழர் எமக்குக் கிடைத்த மாதவமே !

தோல்வியைச் சிந்தனையாக்கி
வெற்றியைப் புனிதமாக்கி
தன்னிலை மறந்து தேசத்தின் நினைவோடு
துயரம் தவிர்த்து வாழ்வினை ஈந்த
தூயவரே மாதவரே நீவிர் எம் ஒளியே !

தேசத்தின் தெருக்களெல்லாம்
தெம்மாங்காய் எழுச்சி கொள்ள
கல்லறை வீரர் கனவினைப் போற்ற
எல்லைகள் தாண்டியும்
எழுச்சி கொள்வோம்
மண்ணிற்கு ஒளிதந்த
மாதவ மணிகளை மண்ணின் மைந்தரை
மாதவமாக மனதிற் கொள்வோம் – அவர்
சந்ததி காக்கவும் கரமிணைப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading