நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

மாதவமே உந்தனை…..

ரஜனி அன்ரன்

மாதவமே உந்தனை…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 28.11.2024

மாதவ மறவரே மண்ணின் மைந்தரே
மறப்போமா உமை நாம்
தாயகமே தாரக மந்திரமாய்
தார்மீகமே இலட்சியமாய்
தியாகமே உன்னத குறிக்கோளாய்
விடியல் கனவோடு வித்தாகிய
புனிதமான உம் தியாகங்கள்
தற்கொடையான ஈகங்கள்
தமிழர் எமக்குக் கிடைத்த மாதவமே !

தோல்வியைச் சிந்தனையாக்கி
வெற்றியைப் புனிதமாக்கி
தன்னிலை மறந்து தேசத்தின் நினைவோடு
துயரம் தவிர்த்து வாழ்வினை ஈந்த
தூயவரே மாதவரே நீவிர் எம் ஒளியே !

தேசத்தின் தெருக்களெல்லாம்
தெம்மாங்காய் எழுச்சி கொள்ள
கல்லறை வீரர் கனவினைப் போற்ற
எல்லைகள் தாண்டியும்
எழுச்சி கொள்வோம்
மண்ணிற்கு ஒளிதந்த
மாதவ மணிகளை மண்ணின் மைந்தரை
மாதவமாக மனதிற் கொள்வோம் – அவர்
சந்ததி காக்கவும் கரமிணைப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan