அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை சிலர் வாழ்வில் பிறந்திடும் பாதை
ஏமாற்றத் தழும்புகள் நீங்கி
எண்ணங்கள் சிறகடிக்க
நம்பிக்கை நதிப்பெருக்காய்
நல்வழியில் பாதைகள் திறக்கட்டும்!
இருளை நீக்கும் பேரொளியாய்
இதயத்தில் மலர்வு உதயமாகட்டும்
கருணை உள்ளம் கொண்டு
கனிவு கொடுப்போம் உறவுகளிடை நெருங்கி நேர்ந்த துன்பம் களைவோம்
உருளும் உலகில் உவகையும்
அன்பும் நம் எல்லோர் மனத்திலும் பொங்கல்போல் பொங்கட்டும்!
மாற்றம் ஒன்றே மாறாதது
அதை ஏற்றுக்கொள்வதே ஞானம்
மாற்றத்தின் ஒளியாய் வாழ்வோம்
மகிழ்வுடன் என்றும் நிலைப்போம்!
நன்றி வணக்கம்!

மகி

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading