அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

முதல் ஒலி

நகுலா சிவநாதன்
முதல் ஒலி

கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின் நல்லொலி ஆனாய்
நயமாய் கண்ட சண்ரைசின் குரலொலியே

37 வருட முதல் ஒலிநீ பரப்பி
முனைப்பாய் ஒளிர்ந்தாய் முன்னின்று
வனப்பாய் வாழ்வியல் சொல்லி வளர்ந்தாய்
வண்ணமுடன் எண்ண அலை விரித்தாய்

தங்கத்தமிழை சிரமேல் வைத்து
பங்கம் இல்லாப் பாரிலே பவனி வந்தாய்
நெஞ்சத்தில் நிறைந்த ஒலிநீயே
நேரிய கருத்துகள் விதைத்தாய் வாழி! வாழி

ஐரோப்பா கண்ட வண்ணமிகு ஒலி
வரலாறாய் ஆனதே தேன்தமிழாலே
நடா மோகன் குரலிங்கு நயமாய் ஒலிக்க
விடாமல் தொடர்கிறதே
விண்ணொலியாய் என்றும்

நகுலா சிவநாதன் 1829

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading