” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதல் ஒலி

நகுலா சிவநாதன்
முதல் ஒலி

கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின் நல்லொலி ஆனாய்
நயமாய் கண்ட சண்ரைசின் குரலொலியே

37 வருட முதல் ஒலிநீ பரப்பி
முனைப்பாய் ஒளிர்ந்தாய் முன்னின்று
வனப்பாய் வாழ்வியல் சொல்லி வளர்ந்தாய்
வண்ணமுடன் எண்ண அலை விரித்தாய்

தங்கத்தமிழை சிரமேல் வைத்து
பங்கம் இல்லாப் பாரிலே பவனி வந்தாய்
நெஞ்சத்தில் நிறைந்த ஒலிநீயே
நேரிய கருத்துகள் விதைத்தாய் வாழி! வாழி

ஐரோப்பா கண்ட வண்ணமிகு ஒலி
வரலாறாய் ஆனதே தேன்தமிழாலே
நடா மோகன் குரலிங்கு நயமாய் ஒலிக்க
விடாமல் தொடர்கிறதே
விண்ணொலியாய் என்றும்

நகுலா சிவநாதன் 1829

Author: