” முதல் ஒலி “

ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025

ஒற்றை மனிதனின் முனைப்பில் ஓயாத உழைப்பில்
மாற்றான் தேசமதில் மாற்றமின்றியே
வெற்றிக்கனியாக கிடைத்தது முதல்ஒலி
காற்றோடு காற்றாக தேம்ஸ்நதிக் காற்றோடு
தேசமெல்லாம் வீசியது தமிழ்மணம்
முத்துவிழாவினையும் முனைப்போடு தாண்டி
முத்தாப்பாய் ஒலிக்குது இன்றும் முதல்ஒலி !

தடைகள் பலதையும் உடைத்து
இடர்கள் பலதும் தாங்கி
உறவுகளின் இணைப்புப் பாலமாகி
தங்கு தடையின்றி ஒலிக்குது
தங்கத்தமிழுக்கு செழுமையைச் சேர்க்குது !

செய்திப் பரிமாற்றம் கருத்துப்பகிர்வு
சுடச்சுடச்செய்திகள் இணையவளச் செய்திகளென
உலக நடப்புக்களை ஒற்றை நொடியில் தந்து
இணையில்லாச் சேவைதனை
இனிதே செய்திடும் சூரியோதயமே நீடுவாழி நீ !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading