மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ என் வகுப்பறை ஆளுமைகள் “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A ) 06.10.2022

எண்ணச் சிறகை விரிக்க
வண்ணக் கனவுகளை நனவாக்க
அறிவுத் திறனைப் பெருக்க
ஆளுமைகளை நிலைநாட்ட
ஆதாரமாய் கை கொடுத்து
அர்ப்பணிப்போடு செயற்பட்ட – என்
ஆசான்களைப் போற்றி மகிழ்வேன் எந்நாளும் !

அறியாமையை விலக்கிய அரங்கம்
அறிவிற்கு விருந்து தந்த அறிவுச்சாலை
கவலைகளை மறக்க வைத்த கல்விச்சாலை
நல்லொழுக்கம் கற்றுத்தந்த கூடம்
நட்பிற்கு நல்லுறவான மாடம்
பன்னிரெண்டு ஆண்டுகள்
பொறுப்போடு எனைச் சுமந்த வகுப்பறை
பொக்கிஷமே என்றும் எனக்கு !

வகுப்பறை நினைவுகள் அலைமோத
வகுப்பு ஆசான்கள் முகமும் மனதில் நிழலாட
வகுப்பில் மாணவ தலைவியானதுவும்
தேர்வுகளில் வெற்றி பெற்றதுவும்
தேர்ச்சி அறிக்கையில் எப்போதும் மூன்றுக்குள் வந்ததுவும்
பேச்சு கட்டுரை போட்டிகளில் பங்கு கொண்டதுவும்
வெற்றி பெற்று மகிழ்ந்ததுவும்
பட்டப் படிப்பிற்கு தெரிவானதும்
வகுப்பறையில் என் ஆளுமைகளே
ஆளுமைகளைத் தந்த என்ஆசான்களே நன்றி நன்றி !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading