மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ரஜனி அன்ரன்

“ என் வகுப்பறை ஆளுமைகள் “ ….கவி….ரஜனி அன்ரன் (B.A ) 06.10.2022

எண்ணச் சிறகை விரிக்க
வண்ணக் கனவுகளை நனவாக்க
அறிவுத் திறனைப் பெருக்க
ஆளுமைகளை நிலைநாட்ட
ஆதாரமாய் கை கொடுத்து
அர்ப்பணிப்போடு செயற்பட்ட – என்
ஆசான்களைப் போற்றி மகிழ்வேன் எந்நாளும் !

அறியாமையை விலக்கிய அரங்கம்
அறிவிற்கு விருந்து தந்த அறிவுச்சாலை
கவலைகளை மறக்க வைத்த கல்விச்சாலை
நல்லொழுக்கம் கற்றுத்தந்த கூடம்
நட்பிற்கு நல்லுறவான மாடம்
பன்னிரெண்டு ஆண்டுகள்
பொறுப்போடு எனைச் சுமந்த வகுப்பறை
பொக்கிஷமே என்றும் எனக்கு !

வகுப்பறை நினைவுகள் அலைமோத
வகுப்பு ஆசான்கள் முகமும் மனதில் நிழலாட
வகுப்பில் மாணவ தலைவியானதுவும்
தேர்வுகளில் வெற்றி பெற்றதுவும்
தேர்ச்சி அறிக்கையில் எப்போதும் மூன்றுக்குள் வந்ததுவும்
பேச்சு கட்டுரை போட்டிகளில் பங்கு கொண்டதுவும்
வெற்றி பெற்று மகிழ்ந்ததுவும்
பட்டப் படிப்பிற்கு தெரிவானதும்
வகுப்பறையில் என் ஆளுமைகளே
ஆளுமைகளைத் தந்த என்ஆசான்களே நன்றி நன்றி !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading