வசந்தா ஜெகதீசன்இனிய

முதியோர் காப்பகம்…
ஏக்கத்தில் தேக்கத்தில் எழில் நிறைக்கும் அரங்கம்
எண்ணற்ற சாதனையின் அறிவாளர் மன்றம்
கன வுகளின் நிஜத்தை உழைப்பாக்கி விதைத்தோர்
கண்ணுறக்கம் மறந்து
கடமைகளில் ஜெயித்தோர்
இல்லறத்தை நல்லறமாய்
இடிதாக்கி நிமிர்ந்தோர்
இயலாமை என்றாக இடரிலே தவித்தோர்
முதியோர் காப்பகத்தில் முடங்குதே சுவாசம்
முதுமையின் முதுசமாய் வழங்குதே ஞானம்
கண்கெட்ட பின்பே சூரிய நமஸ்காரம்
காக்குமா எம்மையும் கலங்காது தியாகம்.
மிக்கநன்றி
சந்தம் சிந்தும் கவியின் சிந்தனைத் தூண்டும் சீராக நெறிப்படுத்தும் முறைமைக்கும் பாராட்டுக்கள்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading