நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உதிர்கின்ற இலைகளே...

உதிர்கின்ற இலைகளே…
உங்களின் வாழ்வு எம்மையும் சாரும்
உருவில் பருவம் ஒற்றுமையாகவும்
தருவின் பருவம் தளிரில் தொடங்கும்
பருவ முதிர்ச்சி பலவகையாகும்
நான்வகைக் கூறில் இலைகளின் இருப்பிடம்
ஒற்றுமை எமக்கும் இதுபோல் தோற்றம்
இளமை வனப்பில் ஏற்ற முனைப்பு
எதுவும் முடியும் என்ற துடிப்பு
படிப்படியாகும் பருவமாற்றம்
பலபடி உயர்வில் முதிர்ச்சி முட்டும்
சருகாய் இலைகள் சந்தியில் வீழும்
உதிரும் இலைபோல் நம்நிலை மாறும்
உடலும் உளமும் தளர்வில் சோரும்
உபாதை பலவாய் உருவில் சேரும்
உதிர்கின்ற இலைபோல் உயிர்களின் வாழ்வு
ஒற்றுமை பயணமாய் ஒன்றுமே இலக்கு!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading