பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உதிர்கின்ற இலைகளே...

உதிர்கின்ற இலைகளே…
உங்களின் வாழ்வு எம்மையும் சாரும்
உருவில் பருவம் ஒற்றுமையாகவும்
தருவின் பருவம் தளிரில் தொடங்கும்
பருவ முதிர்ச்சி பலவகையாகும்
நான்வகைக் கூறில் இலைகளின் இருப்பிடம்
ஒற்றுமை எமக்கும் இதுபோல் தோற்றம்
இளமை வனப்பில் ஏற்ற முனைப்பு
எதுவும் முடியும் என்ற துடிப்பு
படிப்படியாகும் பருவமாற்றம்
பலபடி உயர்வில் முதிர்ச்சி முட்டும்
சருகாய் இலைகள் சந்தியில் வீழும்
உதிரும் இலைபோல் நம்நிலை மாறும்
உடலும் உளமும் தளர்வில் சோரும்
உபாதை பலவாய் உருவில் சேரும்
உதிர்கின்ற இலைபோல் உயிர்களின் வாழ்வு
ஒற்றுமை பயணமாய் ஒன்றுமே இலக்கு!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading