வரமானதோ வயோதிபம்

ராணி சம்பந்தர்

ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே சாதனை படைத்ததில்
துறக்கவே முடியாத ஞாபகமே

எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே
உற்சாக ஊக்கமும் உழுதிடவே
பயமின்றிப் பெலம் கரமிணைய
நல் விளைச்சல் பலன் தந்ததே

விதிவசத்தால் பாரமான முதுமை
உரு மாறியதில் பெருமூச்சானது
கடித்துச் சுவைக்கப் பல் மறுக்க
கண்ணிருந்தும் பார்வை மங்கிட
தசை எலும்புகள் நலிவடைந்திட

தீராத வலி பெருகிய கண்ணீரில்
திருகிய வாலிபப் பருவம் மெருகிட
மானிடர் வரமானதோ வயோதிபம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading