29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
ராணி சம்பந்தர்
ஈரமானதே இளமை அனுபவம்
உரமானது இனிமைப் பதிவகம்
பாரமான சோதனை வேதனை
மறந்தே சாதனை படைத்ததில்
துறக்கவே முடியாத ஞாபகமே
எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே
உற்சாக ஊக்கமும் உழுதிடவே
பயமின்றிப் பெலம் கரமிணைய
நல் விளைச்சல் பலன் தந்ததே
விதிவசத்தால் பாரமான முதுமை
உரு மாறியதில் பெருமூச்சானது
கடித்துச் சுவைக்கப் பல் மறுக்க
கண்ணிருந்தும் பார்வை மங்கிட
தசை எலும்புகள் நலிவடைந்திட
தீராத வலி பெருகிய கண்ணீரில்
திருகிய வாலிபப் பருவம் மெருகிட
மானிடர் வரமானதோ வயோதிபம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.