வரமானதோ வாயோதிபம்

ஜெயம்

தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும்
அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம்
புயலின் நடுவே சிக்கியே மிதப்பு
கடலிலும் மூழ்காது கரையுமேறாது தவிப்பு

இரண்டாம் குழந்தைப் பருவமென்பது உண்மை
மூன்று கால்களிலே நகருகின்ற தன்மை
உடலை நோகவைக்கும் விடுபடாப் பிணியும்
பயந்தே கால்பதிக்கும் மரணத்திற்கான பயணம்

அடுத்தடுத்து அவயவங்கள் வசீகரத்தை கொன்றுவிடும்
வாயோதிபத்தில் மூளையின் திறனும் குண்றிவிடும்
அதிகபட்சமாக மற்றவர்களில் சார்ந்திருக்கும் சூழ்நிலை
கர்ம பலன் விதிப்பயனென வாழ்நிலை

முதிர்ச்சி அடைந்த கல்லென்றால் சிலையாகும்
முதிர்ந்த கனிகள் சுவையென விலையாகும்
முதிர்ந்த நெல்மணிகளின் அரிசி உலையாகும்
முதுமை மானிடர்க்கு சாபத்தின் நிலையாகும்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading