மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

இது எல்லாம் இப்ப எங்கே?

சிவருபன் சர்வேஸ்வரி

இது எல்லாம் இப்ப எங்கே…?

சுதந்திரக் காற்றே தூதுபோ கொஞ்சம் //
நிரந்தரம் இல்லாத நிமிடங்கள் கோடி //
வசிப்பிடம் அற்ற வாழ்விடங்கள் பலதும் //
இப்படியே ஆட்டம் பறந்து கொள்கின்றது //
எப்போதெல்லாம் மனிதம் சிறக்குமோ தெரியாது //
அன்றுபோல் இன்றில்லையே வாழ்வுகளின் மலர்வு//

பரபர விறுவிறு சடசட படபட இரட்டைக் கிழவியாட்டம் //

நடநட நடவென நாட்டிலே எங்கோர் மூலையிலே //

பந்தம் பாசம் பறந்து கடந்த உறவுகள் //

ஒண்ணாய் இருந்து ஒரு குழையல் சாதம் உண்பதும் உண்டா//
ஊமையாய் இருந்து உழன்று திரியும்காலமே //

இது எல்லாம் எப்போவருமோ ஏக்கமே //

இன்னிலை என்று தணியுமோ எதிர்பார்ப்பே //
இலைமறைகாயாய் அகமதில் இடிக்கும் எண்ணமே //
தலைமுறை கண்டு தளராமல் நிற்கவே வருவாயே //
நிலமையில் என்றும் நிதர்சனமாய் நிம்மதியே //
வலம்வருமா இது எல்லாம் இப்போது நடக்குமா //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading