பூமழை தூவும்

பூமழை தூவும்

பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும்
பாமழை தூவிப் பரிவும் மேவிடவே
ஞானமழை பொழியும் ஞாலமும் வேண்டுமடி
தாவிரும் மேகமே தூதாகப் போய்வருவாய்

நீரூற்றுப் பிறந்திடவே நீங்கிடும் துன்பமெல்லாம்

வாவிகுளம் நிறைந்து விட்டால் பசுமையுமே
புரட்சியும் தேவையில்லை அயர்ச்சியும் எங்குமில்லை
எழுச்சியாய் வாழ்ந்திடவும் ஏற்றத்தைப் பெற்றிடவும்

காணமயில் ஆட்டத்தைக் கண்டவர்கள் மகிழ்ந்திடுவார்

தேனிசைக் குரலால் கீதமும் பாடிடுவார்
வான்மழை பொழிந்திடவே வையகம் கனிந்திடவே
வைரமணி விளைந்திடவே வசந்தம் வீசிவரும்

களைப்பாறி இருந்திடவே காக்கும் தெய்வமடி
முளையாக வருவதுதான் மரமாக நிற்குமடி
சளையாத புத்தியாலே களமாடி வருவாயே
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading