” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எண்ணங்கள் கலைந்தன

எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன

திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்

வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின

இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின

முன்னம் எடுத்த பிறவியின் பலனோ

இன்றும் தொடரும் தலைவிதி என்பதா

என்று தணியுமோ எமது தாகம்

நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்

கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்

பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ

கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி

சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி

வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே

இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: