நினைவுகள் கணக்கின்றன 1

ஜெயம்

நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ அவர்களை பார்
கேட்கவில்லையா அந்த உயிர்களின் ஒலி
உணரவில்லையா அந்த தியாகிகள் வலி

இருட்டிலும் ஒளி குறையாத விழிகள்
தடைகளையுடைத்து அமைத்தார்கள் வழிகள்
எங்கே அந்த துணிவின் சந்ததியினர்
அங்கே உறங்குகின்றனர் புனிதர்கள் கல்லறையில்

சாவுக்கு பயப்படாத அஞ்சா நெஞ்சர்கள்
ஓர் இனத்தின் மூச்சென்றால் அவர்கள்
மண்ணையும் மக்களையும் தம்முயிராய் கருதினார்
ஒருவர் வீழ்ந்தாலும் நூறுபேர் எழுந்தனர்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading