எண்ணங்கள் கலைந்தன

எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன

திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்

வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின

இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின

முன்னம் எடுத்த பிறவியின் பலனோ

இன்றும் தொடரும் தலைவிதி என்பதா

என்று தணியுமோ எமது தாகம்

நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்

கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்

பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ

கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி

சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி

வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே

இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading