நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை சிலர் வாழ்வில் பிறந்திடும் பாதை
ஏமாற்றத் தழும்புகள் நீங்கி
எண்ணங்கள் சிறகடிக்க
நம்பிக்கை நதிப்பெருக்காய்
நல்வழியில் பாதைகள் திறக்கட்டும்!
இருளை நீக்கும் பேரொளியாய்
இதயத்தில் மலர்வு உதயமாகட்டும்
கருணை உள்ளம் கொண்டு
கனிவு கொடுப்போம் உறவுகளிடை நெருங்கி நேர்ந்த துன்பம் களைவோம்
உருளும் உலகில் உவகையும்
அன்பும் நம் எல்லோர் மனத்திலும் பொங்கல்போல் பொங்கட்டும்!
மாற்றம் ஒன்றே மாறாதது
அதை ஏற்றுக்கொள்வதே ஞானம்
மாற்றத்தின் ஒளியாய் வாழ்வோம்
மகிழ்வுடன் என்றும் நிலைப்போம்!
நன்றி வணக்கம்!

மகி

Author: