” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை சிலர் வாழ்வில் பிறந்திடும் பாதை
ஏமாற்றத் தழும்புகள் நீங்கி
எண்ணங்கள் சிறகடிக்க
நம்பிக்கை நதிப்பெருக்காய்
நல்வழியில் பாதைகள் திறக்கட்டும்!
இருளை நீக்கும் பேரொளியாய்
இதயத்தில் மலர்வு உதயமாகட்டும்
கருணை உள்ளம் கொண்டு
கனிவு கொடுப்போம் உறவுகளிடை நெருங்கி நேர்ந்த துன்பம் களைவோம்
உருளும் உலகில் உவகையும்
அன்பும் நம் எல்லோர் மனத்திலும் பொங்கல்போல் பொங்கட்டும்!
மாற்றம் ஒன்றே மாறாதது
அதை ஏற்றுக்கொள்வதே ஞானம்
மாற்றத்தின் ஒளியாய் வாழ்வோம்
மகிழ்வுடன் என்றும் நிலைப்போம்!
நன்றி வணக்கம்!

மகி

Author: