மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-17.02.2022
கவி இலக்கம்-1461
உருமாறும் புதிய கோலங்கள்
————————————-
உலகினை புரிந்ததுமே உண்மைகள் அறிந்திட
பலமுனை எங்கணும் உருமாறும் கோலங்கள்
மகத்தான மனிதனின் மாண்பான உணர்வுகளை
மதித்து நடக்காமல் மிதிக்கும்போது
அங்கு மனிதம் மடிந்து உருமாறுகிறது

மனிதர்களை கொத்தடிமை ஆக்கிய கொரோனோ
பல கோலங்களாக உருமாற்றும் பெற்று
புதுப் புது பெயர்களாக விலாசமடித்து
ஆட்சியாய் மகிழ்ச்சியாய் குதூகலிக்கின்றன
மனிதர்களும் குலை நடுங்க செய்கின்றது

தேன் மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சியை
இளையோர் பகிர்ந்து பலன் பெற்று வளர
தமிழ்மொழி நாள் பொன்மாலைப் பொழுதுகளும்
வாசிப்பு உரையரும்பு என உருமாற்றம் பெறுகின்றனவே
வளர்ச்சியில் உருமாறி புதிய பயன்கள் அடைகின்றனரே

காலநிலை மாற்றம் பெற்று புதிய கோலங்களாக
பனிப்பாறை உருகலும் அதி வெட்ப கொடுமையும்
மழை வெள்ள கொடுமைகள் தீ பிளம்புகள் வாய் பிளப்பும்
கோளங்கள் பல மாற்றங்கள் பெற்றும் அழிவும்
மண்ணில் மனிதத்துவம் உருமாற்றம் பெற வைக்கிறதே

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading