Jeya Nadesan

கவிதை நேரம்-22.09.2022
கவி இலக்கம்-1978
பேசாமல் பேசும் உலக மொழி
—————————————–
இயற்கை சூழலும் இறைவன் தோற்றுவித்தும்
மொழிகள் பலதும் உலகில் பிறந்தனவே
சைகை மொழியும் ஆதியில் தோன்றியதே
உலகளவில் காது ஒலி இழந்தோர் 70 மில்லியரே
300க்கு மேற்பட்ட சைகை மொழி பாடமானதே
கை முக பாவனை அசைவு உட்பட்டனவே
வாய்ச்சொல் மொழி அற்றதாக தோன்றுமே
மெளனங்களின் மொழி சைகை மொழியானதே
மனதால் உணர்ந்து விரல்களால் வெளிப்படுமே
சொல்ல வந்தும் பேச முடியாத நிலையானதே
அவதியுறுவோர் சைகை மொழி கற்றுதலிலே
பயன் பெற்று வாழ்வில் சிறப்பு பெறுகின்றனரே
பிறப்பிலும் இயற்கை அனத்தங்களில் உண்டானதே
பயிற்சி அளிப்பதிலும் படிப்பிலும் முன்னேற்றமானதே
உலக சைகை மொழி 23 புரட்டாசி மாத மானதே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading