கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

அபிராமி கவிதாசன்

விருப்பு தலைப்பு ! 31.03.2022

நேரிசை கலிவெண்பா
“ பெண்ணின் பெருமை “

பிறப்பினை ஈன்றிடும் பெண்ணின் பெருமை
சிறப்புடை மானிடத்தின் சீர்மை – அறமாம்
திறமுடை சக்தியால் திண்ணம் நிறைய
இறக்கும் சுமையின் இறை

குலத்தில் விளக்காய் குலமகளாய் நிற்பாள்
நலத்தில் அக்கறை நல்கி-நிலமாய்
இலட்சம் படைப்பாள் இலட்சியம் வெல்வாள்
உலகினை ஆழ்வாள் உழைத்து

எறும்பின் உழைப்பினை எள்ளி நகைப்பாள்
உறுதியின் உண்மையின் உள்ள- அறும்பு
சிறுதுளி வெள்ளமாம் சிக்கனத்தின் செம்மல்
இறுதிவரை காத்திடுவாள் ஈந்து

பின்னுறங்கி முன்னெழும் பெண்மை முழுமதி
புன்னகை சிந்திடும் பூவினத் – தென்றலாம்
அன்றலர் மல்லிகை அன்பியப் பெண்மகள்
மன்றினில் நிற்பாள் மலர்ந்து

மகளிரை வாழ்த்துகின்றேன் மாண்பினை போற்றி
புகழுரை சூட்டி புனித அகத்தால்-
சிகரத்தை எட்டிடும் சித்திர பெண்மை
பகலவன் தீபமாம் பாருக்கு

நன்றி 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading