வரமாகும் வாய்ப்புகள்

சக்தி சிறினிசங்கர்
போட்டியுமே இல்லா பொறுமை வேண்டும்
பொசுங்கிடாத வாழ்வைப் போற்ற வேண்டும்
கூட்டினிலே வாழும் குருவி கூட
குவலயத்தில் பறந்து குதிக்க முனைப்பைக்
காட்டிடுமே தனது கடுமையான உழைப்பை
கண்காணி அதனைக் கண்டால் கருணை
காட்டிடுவர் கதவைத் திறக்கக் குருவி
கானமும்தான் பாடிக் களிப்பில் மகிழும்!
தரமான வாழ்வைத் தக்க வைக்க
தளங்களையும் தேடிப் போக வேண்டும்
சிரமமெனப் பாரா சிறகை அடித்து
சிந்தனையை விரிக்கச் சீரும் சிறப்பும்
வரமாகும் வாழ்வில் வசந்தம் வீசும்
வாய்ப்புகளை நழுவ விடாது நாமும்
அரமாக நாளும் அறிவைத் தீட்டி
அவனியைத்தான் ஆண்டு கொள்ள லாமே!
நன்றி வணக்கம்!

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading