பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எங்கே அமைதி

தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி
பாசத்தை சிறிதும் அறியான் ஆனால்
பூமியில் புனிதம் கண்டடைய முயல்கின்றான்

அமைதி என்பது எங்கே இருக்கும்
அது நீதியின் நெஞ்சிலே உதிக்கும்
நேசத்திற்கு எங்கெல்லாம் தட்டுப்பாடோ அங்கெல்லாம் அமைதி மரிக்கும்

கோபத்தை இன்னும் களையவில்லை ஆனால்
ஆலயம் தினசரி செல்கின்றாய்
பொறாமை அதுவும் அகலவில்லை
ஆனால் பக்தியோடு பிராத்தனை செய்கின்றாய்

அன்னையின் அரவணைப்பில்
அமைதி துயிலும்;
தந்தையின் ஆறுதலில்
அமைதி சிரிக்கும்

அமைதி எங்கே அது தொலைவிலில்லை தொலையவுமில்லை
இன்னும் இதயத்துள்
காத்திருக்கின்றது
Jeyam

Author: