” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)….கதிரும் தமிழும்… 28.05.2026

கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை உச்சியிலே தமிழின்பிறப்பு
இருளைப் போக்கி ஒளியைத் தருவதுகதிர்
அறியாமை இருளகற்றி அறிவிற்கு ஒளிதருவதுதமிழ் !

காலம் பிறக்கும்முன் உதித்தான் கதிரவன்
கல்தோன்றாக் காலத்தின் ஒளிப்பிளம்பு தமிழ்
கதிர்உலகிற்கு தருவது செந்நெல்வளம்
தமிழ் உலகிற்கு தருவது நன்னெறிவளம்
மண்ணில் உயிர்கள்வாழ கைகொடுப்பான் கதிர்
மனிதம்வாழ அறிவெனும் ஒளிதருவாள் தமிழ் !

கதிரவன் இல்லையெனில் புவியில் உயிர்களில்லை
தமிழ்இல்லையெனில் தமிழர்க்கு முகவரியில்லை
விண்ணில் வாழும்வரை கதிரவன்ஒளிரட்டும்
மண்ணில்மனிதன் வாழும்வரை தமிழும்வளரட்டும்
கதிரவன்வெப்பம் இப்போஉச்சம்
தமிழின்சுவையோ எப்போதும்உச்சம் !