” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)….கதிரும் தமிழும்… 28.05.2026

கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை உச்சியிலே தமிழின்பிறப்பு
இருளைப் போக்கி ஒளியைத் தருவதுகதிர்
அறியாமை இருளகற்றி அறிவிற்கு ஒளிதருவதுதமிழ் !

காலம் பிறக்கும்முன் உதித்தான் கதிரவன்
கல்தோன்றாக் காலத்தின் ஒளிப்பிளம்பு தமிழ்
கதிர்உலகிற்கு தருவது செந்நெல்வளம்
தமிழ் உலகிற்கு தருவது நன்னெறிவளம்
மண்ணில் உயிர்கள்வாழ கைகொடுப்பான் கதிர்
மனிதம்வாழ அறிவெனும் ஒளிதருவாள் தமிழ் !

கதிரவன் இல்லையெனில் புவியில் உயிர்களில்லை
தமிழ்இல்லையெனில் தமிழர்க்கு முகவரியில்லை
விண்ணில் வாழும்வரை கதிரவன்ஒளிரட்டும்
மண்ணில்மனிதன் வாழும்வரை தமிழும்வளரட்டும்
கதிரவன்வெப்பம் இப்போஉச்சம்
தமிழின்சுவையோ எப்போதும்உச்சம் !

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading