அங்கீகாரம்

சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்

ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே வழியேகும் போதில்
சீலமும் உணர்வாய் சீரோடு எழுவாய்

ஞாலம் உனக்காக மிளிர்ந்தது பாராய்
தலமை பண்புடன் அங்கீகாரம் பெறுவாய்
வளமையை மாற்றாதே வஞ்சனை செய்யாதே
உடமையை அழிக்காதே ஊனத்தை விதைக்காதே

இனியவை சேர்ந்திடவே இசையாய் மீட்டுவாய்
கொடியது பாவம் கொல்லாதே நியாயம்
மிடிமை அகற்றியே மிகையானது மேன்மை
அடிமை தேவையில்லை அறமே வெற்றி

முயல்வாய் முயற்சி முளுமை அடையவே
துயிலாத நேர்மை துலங்கிடவே பாரிலே

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading