நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்

விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய் வாழ்வு

நிலையில்லை என்றுணர்ந்தும்
நிச்சயமாய் எண்ணி -நிதம்
கபட நாடகத்துள் வெற்றி கொள்ள
சூட்சுமங்கள் வகுப்போம்

வள்ளலெனச் சொல்வோம்
வகைவகையா்ச் சுருட்டி -பிறர்
நலிவடையும் நொடியினில் -எம்
பெட்டகங்கள நிறைப்போம்

பாவச்சுமை காவி-அங்கு
நிலைபெறுதலுக்கா ஓட்டம்
புரிந்தெழுந்து அவை நடந்து
அன்பினிலே நிலைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan