கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்

விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய் வாழ்வு

நிலையில்லை என்றுணர்ந்தும்
நிச்சயமாய் எண்ணி -நிதம்
கபட நாடகத்துள் வெற்றி கொள்ள
சூட்சுமங்கள் வகுப்போம்

வள்ளலெனச் சொல்வோம்
வகைவகையா்ச் சுருட்டி -பிறர்
நலிவடையும் நொடியினில் -எம்
பெட்டகங்கள நிறைப்போம்

பாவச்சுமை காவி-அங்கு
நிலைபெறுதலுக்கா ஓட்டம்
புரிந்தெழுந்து அவை நடந்து
அன்பினிலே நிலைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading