ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்..2353

ஐயாயிரம் ஆண்டுகள் முன்பே வையகத்தில் உதித்த கலையாம் இந்திய தேசத்தில் தோற்றம் வேதங்களில் உண்டே ஆதாரம் முனிவரும் யோகியரும்...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்

விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய் வாழ்வு

நிலையில்லை என்றுணர்ந்தும்
நிச்சயமாய் எண்ணி -நிதம்
கபட நாடகத்துள் வெற்றி கொள்ள
சூட்சுமங்கள் வகுப்போம்

வள்ளலெனச் சொல்வோம்
வகைவகையா்ச் சுருட்டி -பிறர்
நலிவடையும் நொடியினில் -எம்
பெட்டகங்கள நிறைப்போம்

பாவச்சுமை காவி-அங்கு
நிலைபெறுதலுக்கா ஓட்டம்
புரிந்தெழுந்து அவை நடந்து
அன்பினிலே நிலைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading