கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்

விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய் வாழ்வு

நிலையில்லை என்றுணர்ந்தும்
நிச்சயமாய் எண்ணி -நிதம்
கபட நாடகத்துள் வெற்றி கொள்ள
சூட்சுமங்கள் வகுப்போம்

வள்ளலெனச் சொல்வோம்
வகைவகையா்ச் சுருட்டி -பிறர்
நலிவடையும் நொடியினில் -எம்
பெட்டகங்கள நிறைப்போம்

பாவச்சுமை காவி-அங்கு
நிலைபெறுதலுக்கா ஓட்டம்
புரிந்தெழுந்து அவை நடந்து
அன்பினிலே நிலைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading